Sunday 21 October 2012

தமிழ்ச் சாதிகளின் வரலாறு

     
                                       தமிழர் வேந்தன் - தொல்காப்பியம் போற்றும் இந்திரன்  
              

               மனிதனின் தோற்றம் பற்றிய சர்ச்சைகளை விடுத்து மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, அறிவியல் ரீதியாக இயங்கியல் தத்துவத்தின்படி பகுத்தறியும்போது மட்டுமே சாதி பற்றிய இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.இயங்கியல் தத்துவத்தின்படி, ஆதியில்  மனிதன் மழை ,வெள்ளம் போன்றவைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் 
கொள்ள மலைகளிலேயே வாழ்ந்தான். மலைகளில் காட்டுவாசியாக இருந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்தான். 
கூட்டம் கூட்டமாக வாழ்ந்த அம்மக்கள்  குறிஞ்சி நில குறவன்-குறத்தி ( இன்றைய குறவன்-குறத்தியோடு மட்டும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. பல பழங்குடிகளும் குறவன் குறத்திகளே.) என அழைக்கப்ட்டனர். குகைகளில் வைத்து உண்ணப்படும் பொருட்கள் ( இறைச்சி, பழங்கள் ) நீண்ட நாள் மழை மற்றும் இயற்கை  சீற்றத்தின் போது கெட்டுப் போய் அவர்களை பலநாள் பசியில் ஆழ்த்தியது.நீண்ட நாள் மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அவன் குகையை விட்டு 
வெளியல் வந்து வேட்டையிட முடியாமல் போனது.

                  இவ்வுணவுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாய்  ஒரு பெரும் கூட்டம் குறிஞ்சி நில  குறவன்-குறத்தியிலிருந்து பிரிந்து நிரந்தர உணவுத் தேவைக்காய் மலையை விட்டு கீழிறங்கி காடுகளில் இருப்பிடங்களை அமைக்கத் தொடங்கியது. அவன் உணவுக்காக விலங்குகளைப் பழக்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். அங்கு இயற்கையாய் விளைந்த தானியங்களையும் சேகரித்து உணவுத்தேவையைப் ஓரளவு பூர்த்தி செய்து கொண்டான். அம்மக்களே இடையர்/ஆயர் (கோனார்) என்றும் அந்நிலப் பகுதியே முல்லை எனவும் அழைக்கப்பட்டது.எனினும் பெரும் வெள்ளம், காட்டுத்தீ மற்றும் ஆண்டு முழுவதுக்குமான உணவுத்தேவை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் அவனை மீண்டும் ஆற்றங்கரை ஒட்டிய சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது.

                      
             மனிதன் ஆற்றங்கரைச் சமவெளிகளுக்கு இடம்பெயர்ந்த நிகழ்வுதான் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சின் அடுத்த கட்டமாகிப் போனது. பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் கண்டுபிடித்தது. அம்மக்களே பள்ளர்/மள்ளர் என அழைக்கப்பட்டனர். இந்நிலப்பரப்பே மருதம் என அழைக்கப்பட்டது.  மற்ற நிலப் பகுதிகளை ஒப்பிடும்போது மனிதனின் முக்கிய வாழ்வாதாரமான உணவும், நீரும், இருப்பிடமும் மருத நிலத்திலேயே பெருமளவில் இருந்தன. ஒப்பில்ல உணவு உற்பத்தியின் உச்சமாக நெல் வேளாண்மை மருதநிலப்   பள்ளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி அதிக அளவில் மருதநிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டதால் பிற நிலத்து மக்களும் மருதநிலத்தைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்ப்பட்டது.

        மருதநிலத்தின் பெரும் உணவு உற்பத்தியின் விளைவால் அதற்கான தொழிலாளர்களின் தேவையும் அதிகரித்தது. உழவுக்குத் தேவையான கலப்பைகளையும், போர்க்கருவிகளையும் வேறுசில இரும்பு மற்றும் மரப் பொருட்களையும் செய்யும் தொழிலை அம்மருத நில மக்களில் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். அம்மக்களே கொல்லர், தச்சர் என அழைக்கப்பட்டனர்.

            மக்களின் பழக்கத்திற்குப் பயன்பட்ட மண்பாண்டங்களை மருத நில மக்களில் ஒரு கூட்டம் செய்யத்துவங்கியது. அம்மக்கள் குயவர் எனப்பட்டனர். மருதநிலத்தில் பனையைப் பயிர் செய்த ஒரு பகுதி மக்களே சானார்(நாடார்) எனப்பட்டனர். இதையே கரிவலம்வந்தநல்லூர் கல்வெட்டு தேவேந்திரன் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பனை போன்ற வித்துகளைக் கொண்டு வந்து பயிர் செய்ததாகக் கூறுகிறது.

          முதன் முதலில் மனிதன் மீன் பிடிக்க கற்றுக்கொண்டதே ஆறு மற்றும் குளங்களில்தான். அதன்பின் மனிதன் கடலில் மீன்பிடிக்கவும் கற்றுக்கொண்டான். அவ்வாறு மருதநில ஆறுகளில் மீன்பிடித்த மக்களே கரையாளர் என அழைக்கப்பட்டனர். அவர்களே நூறு ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கரையாளப் பள்ளர் எனவும் அழைக்கப்பட்டனர். கடலில் மீன்பிடிக்கக் கற்றுக்கொண்ட மருதநில மக்களே நெய்தல்நில மக்களாகவும் மீனவர், பரதவர், முக்குவர் எனவும் அழைக்கப்பட்டனர்.
           
             இம்மருதநில மக்களோடு "மருதநில தொழிற்மக்கள்" பதினெட்டு வகையினரும் இருந்ததாக இலக்கியச் சான்றுகள் உண்டு. அவர்கள் :
  1. செம்மான்(தோல் தொழிலாளி)
  2. குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
  3. கொத்தன்(வீடு கட்டுவோர்)
  4. கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
  5. கன்னான்(செம்பு வேலை செய்வோர்)
  6. தட்டான்(பொன் வேலை செய்வோர்)
  7. தச்சன்(மரவேலை செய்வோர்)
  8. கற்றச்சான்(கல் வேலை செய்வோர்)
  9. செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
  10. கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
  11. பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
  12. கிணையன்(கிணைப் பறையன்)
  13. பாணன்(பாடுநர்)
  14. கூத்தன்(ஆடுநர்)
  15. வள்ளுவன்(அறிவர்)
  16. மருத்துவன்(நோய் குணப்படுத்துவோர் )
  17. வண்ணான்(சலவைத் தொழிலாளி)
  18. மஞ்சிகன்(சவரத் தொழிலாளி)
          இவர்களைத்  தவிர  பிள்ளை, முதலி போன்ற பட்டங்களைக் கொண்டும் பல சிறு சிறு சாதிகளும் உள்ளன. அவையாவும் இடைக்காலத்தில் உருவான சாதிகள் ஆகும். இன்றைய  சாதி என்பது தமிழர்களின் தொழில் அடிப்படையில் இருந்த அடையாளம் ஆகும். அவ்வடையாளத்தை எவ்வித சிக்கலும் இல்லாமல்தான் தமிழர்கள் வைத்திருந்தனர். 
வந்தேறி தெலுங்கு வடுகர்களால்(நாய்க்கர் ) நிகழ்த்தப்பட்ட வேந்தர்களின் வீழ்ச்சி  தமிழரின் வாழ்வியல் அமைப்பையே தலைகீழாய்ப்  புரட்டிப்போட்டது. தொழிற்பிரிவுகள் சாதிகளாக இருக்கப்பட்டன.   

                  மார்க்சிய தத்துவத்தின்படி சொல்லப்படும் குடும்பம்-சொத்து- அரசு என்ற நிறுவனங்கள் முதன் முதலில் மருதநிலத்திலேயே நிறுவப்பட்டன. நாகரீக வாழ்வின் பரிணாம வளர்ச்சியின் முதற்க்கட்டமாக   உறவுமுறையற்ற காட்டுமிராண்டி வாழ்வு சீரமைக்கப்பட்டு "குடும்பம்" என்ற அமைப்பு மருத நிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. எனவேதான் மருதநில மக்கள் "குடும்பர்" எனவும் அழைக்கப்படுகின்றனர். மொழியானது தன்னிகரற்று ஓங்கி வளர்ந்து
செம்மையடைந்தது. மருதநிலத்தின் பெருஞ்செல்வமானது  பகைவர்களையும் கள்வர்களையும் மருத நிலம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.
               பகைவர்களிடமிருந்தும் கள்வர்களிடமிருந்தும் மக்களைக் 
காக்கும்பொருட்டு அரசு என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இவ்வரசு எனும் அமைப்பானது பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குப் பின் பேரரசு எனும் நிலையை அடைந்தது. மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தவுடன் அக்குடும்பத் தலைவன் குடும்பன் எனப்பட்டான். பல்வேறு குடும்பங்கள் சேர்ந்து ஒரு சிறு கூட்டமாக வாழ்ந்த பகுதி ஊர் எனப்பட்டது. எனவேதான் மருத நிலக் குடியிருப்புகள் மட்டுமே ஊர் என அழைக்கப்பட்டன. அவ்வூரின் தலைவன் "ஊர்க் குடும்பன்" எனப்பட்டான்.இவ்வாறு பல ஊர்களையும் ஒருங்கிணைத்து நாடுகள் எனும் சிறுசிறு நிலப்பகுதியும் அந்நாடுகளின் தலைவர்கள் "நாட்டுக் குடும்பர்கள்"  எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வமைப்பே பாண்டியர்கள் வீழ்ச்சியடைந்த 15 - ஆம் நூற்றாண்டுவரை தமிழரின்(சேர சோழர் உட்பட )  உள்ளாட்சி அமைப்பாக இருந்தது. இப்படியான பல நாடுகளையும் ஒருங்கிணைத்து உருவானதே அரசு எனும் பெரும் நிறுவனம் ஆகும். அவ்வாறான பெரும் பாண்டிய அரசின் மன்னர்களில் பெருங்குடும்பனே முதுகுடுமி பெருவழுதியாவான். அரசு எனும் அமைப்பானது தனது எல்லையை நால்வகை நிலங்களுக்கும் விரிவுபடுத்தியே அமைக்கப்பட்டது.
               
                  ஈடு இணையற்ற மொழியின் வளர்ச்சியால் பல்வேறு தொழில்நுட்பங்களும் மருத நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றில் ஒன்றுதான் கடல் மேலாண்மை. மருதநில மக்கள் தங்களின் பெரும் பொருள் கொண்டு பெரும் கப்பல்களையும், நாவாய்களையும்( இதனாலேயே "குடும்பர்கள்" எனும் பெயரில் பெரும் வணிகக் கப்பல்களை கண்டதாக சீன மாலுமி கூறுகிறார். ) கட்டி ஆமைகளின் பின்னே கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி உலகமெங்கும் சென்று தமிழரின் முதல் பேரரசும் உலகின் முதல் வல்லரசுமான பாண்டியப் பேரரசை நிறுவி உலகாண்டனர். அதன் எச்சமே இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளான கிரேக்கம், சீனம், இலத்தீன், ஜப்பான், வியட்நாம், மெக்ஸிகோ, சிலி, பெரு, பிரேசில், தாய்லாந்து, நேபால், பர்மா போன்ற இன்னும் பல்வேறு பகுதிகளிலும் காணக்கிடக்கின்றன. இதனாலேயே உலகின் பல்வேறு மொழிகளின் வேர்ச்சொற்களும் தமிழில் உள்ளன.

                கிரேக்கத்தின் ஆதிக் கடவுள் ஏதனபள்ளா எனவும் கிரேக்கத்தை ஆண்ட அரசர்கள் பாண்டியன் 1 மற்றும் பாண்டியன் 2 எனவும் கிரேக்க வரலாறுகள் கூறுகின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாய் பாண்டியன் 2 அரசனின் மகனின் பெயரே பள்ளன் என உள்ளது. இவர்கள் நம் மருதநிலப் பள்ளர்களே ஆவர்.பிரேசிலின் பெரும்பகுதி மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் பள்ளர் என்று போட்டுக்கொள்கின்றனர்.சிலியில் இருக்கும் ஒரு நகரின் பெயர் மள்ள. இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதி இசுலாமியர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால், பள்ளர்களின் பாண்டியர் படையின் போர் மறவர்களைக் குறிக்கும் "காலாடி" எனும் பெயரை தங்களின் 
அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளர் எனும் பெயர்கொண்டு பல ஊர்கள் உள்ளன. வெளி நாடுகளிலேயே தமிழினத்திற்கான சான்றுகள் 
நூற்றுக்கணக்கில் காணக் கிடைக்கும்போது 
இந்தியாவிலோ நாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன.இந்தியாவில் தமிழர்களின் வரலாறு மீட்டெடுக்கப்படுமானால் 
இந்தியாவின் ஆதிக்க சக்திகள் தமிழரே. ஆனால் இந்தியாவில் உள்ள 
தமிழர்கள் அனைவரும்  தமிழருடைய 
அடையாளமாக இன்றும்  வைத்திருப்பது பள்ளர், மள்ளர், குடும்பர் எனும் பெயர்களையே. இவை அனைத்தையும் தமிழினத்திற்கான சான்றாக தமிழினத்திற்கான ஆளுமையாகப் பார்க்காமல் சாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பதனாலேயே தமிழனின் பெருமையும் புகழும் மதுரைவரைக்கூட தெரியாமல் புதைந்து கிடக்கிறது.

                  முல்லை நில மக்களோடு கொங்குப் பகுதி பள்ளர்கள் வைத்திருந்த கலப்பு உறவே பின்னாளில் கவுண்டர் எனும் சாதி உருவாகக் காரணம் ஆனது. உண்மையில் கவுண்டர் என்பது சாதியல்ல; ஒரு பட்டம். கவுண்டர் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய மக்கள் எல்லோரிடமும் தங்களுக்கிடையே கொள்வினை-கொடுப்பினை கிடையாது.ஒக்கலிகா போன்ற கவுண்டர் பிரிவுகள் தெலுங்கு  பேசும் மக்கள் ஆவர்
இன்றைய கவுண்டர்களில் மல்லக் கவுண்டர் என்று ஒரு  பிரிவும் உண்டு. கவுண்டர் பிரிவுகள் சில பழனி முருகனை
கும்பிடுவதோடு அவரோடுள்ள இடும்பன் எனப்படும் "குடும்பன்" சாமியை 
குல தெய்வமாகவும் கும்பிடுவது குறிப்பிடத்தக்கது. ஆக இவர்கள் மருத நில மக்கள் என்பதற்கு இதுவும் சான்று. இலங்கையில் அண்ணன்மார் சாமி பள்ளர்களின் குல தெய்வமாக இருக்கையில்  இங்கு மட்டும் கவுண்டர் எனும் சாதியும் சொந்தம்
கொண்டாடுவது கவுண்டர்களின் மருத நிலத்தொடர்பேயாகும்.  முல்லை நில மக்களோடு உறவு கொண்ட பள்ளர்களால் வேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் முல்லைநில மக்களைக் கட்டுப்படுத்த முடியாதுபோய் போரில் முடிந்தது; அதுவே அண்ணன்மார் வரலாறும் ஆனது.  

               சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பள்ளர்களில் ஒரு பகுதியினர் முல்லை நில மக்களின் கலப்பால் பள்ளி எனும் பெயரில்  வன்னியர் எனும் தனிச்சாதியினர் ஆனர். வன்னியர் என்பது பட்டமே; சாதியல்ல. இலங்கையில் வன்னியர் எனும் பெயர் கொண்டோர் அனைவரும் பள்ளர்களே. தமிழகத்திலும் 
அணைத்து பாண்டியராசா   கோவில்களிலும்  வன்னிராசாவும் 
 வன்னிமாச்சியும் பள்ளர்களாலேயே  வணங்கப்படுவது, வன்னியர் முல்லைநில மக்களின் கலப்பால் பிரிந்த பள்ளர்களின் ஒரு பகுதியினர் என்பதாலேயே ஆகும்.
வன்னியர்களில் ஒரு பிரிவு மக்கள் தெலுங்கு பேசுவதும் உண்டு. இவர்களுக்கும் ஏனைய வன்னியர்களுக்கும் கொள்வினை-கொடுப்பினை கிடையாது. 

                   இம்மண்ணையும் மக்களையும் காத்து நின்ற வேந்தர்களின் வீழ்ச்சி, 
ன்றாய் இருந்த தமிழினத்தை சாதியாய்ச் சூறையாடி  இன்று வரையிலும் 
பிரித்து வைத்திருக்கிறது. தமிழினத்திற்க்கிடையே பகையை எண்ணெய் இட்டு வளர்க்கிறது வந்தேறி வடுக திராவிடக் கூட்டம். இக்கூட்டமானது உண்மையில் என்றுமே சாதியை ஒழிக்காது. ஏனெனில் சாதிதான் இவர்களை இம்மண்ணில் ஆள வைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வறிவற்ற நிலையில் திராவிடக் கூட்டம் மேல்சாதி, கீழ்சாதி எனப் பிரித்து சாதி ஒழிப்பு(!!!) செய்கிறது. இக்கூட்டம் ஒருநாளும் இது எப்படி மேல் சாதி..? இது எப்படி கீழ்சாதி...? எனும் பகுத்தறிவுக் கேள்வியைக் கேட்டதில்லை.அப்படியானதொரு சிந்தனை விதைக்கப்பட்டிருப்பின் ஒரே இனமான தமிழினம் தன் சாதி பற்றிய வேரைத்தேடி ஒரு புள்ளியில் என்றோ இணைந்திருக்கும். அதை விடுத்து, இல்லவே இல்லாத மேல்சாதி கீழ்சாதி கலப்பு எனும் பெரும் பொய்க்கோட்பாடு கொண்டு தமிழர்க்குள்ளே பகையை மேலும் மேலும் வளர்க்கிறது.
                    இம்மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய தலையாய கடமை கொண்டுள்ள வேந்தன் மரபினரின் புறநானூற்றுப்படை களம்காண புறப்பட்டுவிட்டது. வேந்தர்குல கிளைக்குடிகளையும் ஏனையபிற தமிழ்ச் சாதிகளையும் கரம்பற்றிக் களம் காணும் முகமாகவே யாம் சாதிபற்றிய பொய்மைகளை உடைத்து எமது உறவுகளை நோக்கி கரம் நீட்டி அழைக்கின்றோம். எமது கரம்பற்றி தமிழினம் காக்க வருவதும் இனத்தோடு சேர்வதும் உங்களின் முடிவுக்கே விடப்படுகிறது. யார் வரினும் வராவிட்டாலும் தலைக்குடிகளான, வேந்தர் மரபினரான பள்ளர்படை தமிழினம் மீட்க களம் கண்டே தீரும். இது உலகாண்ட பாண்டியர்களின் வேந்தன் மரபினரின் தணியாத தமிழர் தாயகத் தாகம்.
                                                                                        - செல்லப்பாண்டியன்                  
        ( நன்றி : கடலியியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் திரு.ஒரிஸ்ஸா பாலு அவர்கள். )                          

98 comments:

  1. ஆக பள்ளர்கள்தான் எல்லாமே....

    ReplyDelete
    Replies
    1. வரலாறு அப்படி தான் கூறுகிறதாம்....ஹா ஹா

      Delete
    2. marutha nilathu makkale pallar melum budhar kaalathil DEVENDHIRANATH yenum arasan ulau tholilai meetkondathukana aatharamum ullana. Avan peyaralaiye pallargal devendeirargal yennrum alaikapadukindranar.............

      Ranjith mallar

      Delete
    3. வரலாறாடா இது....

      Delete
    4. தமிழ் மொழி அப்படிதான் சொல்லுது

      Delete
    5. 🤣🤣🤣🤣

      வரலாறை அரசு ஆவணத்துடன் பேச சொல்லுங்க 🤣🤣

      Delete
    6. அட நாட் ல இருக்கிற வரலாறு எல்லாம் தஇரஉடஉரஆனஉங்க கேவலம் உருட்டு உருட்டு நல்ல உருட்டு து

      Delete
  2. மாற்று இருப்பின் கூறுங்களேன் ...

    ReplyDelete
  3. *தாங்கள் கூறும் மள்ளர் என்பதை
    பாண்டிய மன்னர்களின் பட்டமாக ஒப்புக் கொண்டாலும்.....இப்போது இருக்கும் பள்ளர் தான் மள்ளர் என்பதற்கு என்ன ஆதாரம்?

    *பள்ளி என்பது சோழ சேர பல்லவ சத்ரியக்குலமான வன்னிய பிரிவின் ஒரு
    சிறு புள்ளி...அதைப் போல் 142 பட்டங்கள் உண்டு இந்த சத்ரிய குலத்திற்கு!!

    *மேலும் மள்ளர்கள் தான் வன்னியர் என்றால்...
    முல்லை நிலப் பகுதியில் மள்ளர்கள் வருவதற்கு முன்பு வாழ்ந்தவர்கள் யார்?!?!

    *நெய்தல் பகுதியில் வாழ்ந்தவர்கள் யார்...?!?
    [இன்றும் நெய்தல் பகுதியில் பெரும்பானமையாக வாழ்பவர்கள் யார் என்று விசாரித்து
    தெரிந்து கொள்ளுங்கள்]

    *சோழ,சேர மண்ணிலிருந்து சென்று
    கர்நாடகாவில் வாழும் பல லட்சம் வன்னிய திகிலர்களும் பள்ளர்கள் தானா?!?
    ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, நெல்லூர் போன்ற பகுதிகளில் வாழும்
    சில லட்சம் வன்னியாஸ் சத்ரியர்களும் பள்ளர்கள் தானா?!

    பூம்புகாரில் வாழ்ந்தவர்களும்,செஞ்சியில் வாழ்ந்தவர்களும் பெரும்பான்மையாக வன்னியம் என்ற சத்ரிய குலம்...

    போருக்கு சென்ற சத்ரிய குலத்திற்கும் விவசாயம் செய்த பள்ளர்களுக்கும்,,
    என்ன சம்மந்தம்?!
    பள்ளி என்ற சிறு வார்த்தையை வைத்துக் கொண்டு தொடர்பு பேசும் நீங்கள்...

    *பாண்டிய மன்னர்களின் சில பட்டங்களில் ஒன்றான மள்ளர் என்ற பட்டத்தை விடுத்து,
    போர் படையிலோ
    போர் தலைமையிலோ
    பள்ளர்கள் இருந்ததாக ஒரே ஒரு சான்று காட்ட முடியுமா...?

    ReplyDelete
    Replies
    1. மள்ளரின் ஒரு கூட்டமே 'வன்னியர்'
      ==================================
      போற்பயிர்ச்சி அளித்த களரியை 'பள்ளி' என்றனர். இப்பள்ளியில் படைப் பயிற்சி பெற்றவரைக் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் 'பள்ளிகள்' என்ற தனி சாதியாக்கினர். இவர்களில் சிலர் குறுநில மன்னர்களாக சின்னஞ்சிறு படைகளை வைத்துக் கொள்ளும் உரிமையுடன் நாடாளும் மன்னனிடம் பற்றுறுதி (Oath of Fealty ) உடன்படிக்கை செய்துகொண்டு படையாட்சிகள் (Fiefs ) ஆயினர். இவாறு படையாட்சி உரிமை பெற்றவர்களில் பெரும்பாலோர் பள்ளி சாதியில் இருந்து வந்தவராயினும், பள்ளிகள் எல்லாருமே படையாட்சிகளாக இருக்கவில்லை;அவ்வாறு இருக்கவும் முடியாது.

      நாடு என்ற அடிப்படை ஆட்சிப் பகுதிக்கு மாறாக வன்னிமை என்ற புதிய ஆட்சிப் பகுதி தோற்றுவிக்கப் பட்ட போது, வன்னிமைக்குத் தலைவரானவர்களை 'வன்னியர்' என்றனர். நாட்டின் ஆட்சி தலைமை ஏற்றவர்களை 'நாட்டார்' என்றதைப் போல், வன்னிமையில் தலைவனை 'வன்னியன்' என்று அழைத்தனர். 'நாட்டார்' என்ற ஆட்சிப் பட்டத்தை பெற்றவர்கள் வெவேறு சாதிளில் இருந்து வந்தவர்களாய் இருந்தனர். காலப் போக்கில் 'நாட்டார்' பட்டம் பெற்றவர்கள் எல்லாம் நாட்டான் அல்லது நாடான் என்ற புதிய சாதியானதைப் போல் வன்னியன் பட்டத்தைப் பெற்ற வெவ்வேறு சாதியறேல்லாம் 'வன்னியர்' என்ற புதிய சாதியாகத் தோற்றம் எடுத்தனர். பள்ளி சாதியினர் எல்லாருமே வன்னியர் என்ற புதிய அடையாளத்தைத் தழுவிக் கொண்ட போக்கு திருவோட்டு அரசியலின் அடிப்படையில் அண்மையின் தோன்றிய நிகழ்வாகும்.

      மள்ளர் குடியில் இருந்து பிரிந்து சென்ற கூட்டமே 'வன்னியர்'. ஈழத்தில் வன்னியன் என்ற பெயரைக் கொண்டு இருந்தவர்களெல்லாம் பள்ளர்களே.தென்பாண்டி நாட்டில் வன்னியர் என்று பெயரிடும் மரபு மள்ளரிடமும் உள்ளது. பள்ளர்களின் பாண்டியராசா கோயில்களில் வன்னியராசா, வன்னிச்சியம்மாள் என்ற காவல் தெய்வங்கள் இருப்பதும் இதற்க்கு சான்றாகும்.
      ..........

      அறிவர் குணா
      தமிழக ஆய்வரண்

      Delete
    2. //*பாண்டிய மன்னர்களின் சில பட்டங்களில் ஒன்றான மள்ளர் என்ற பட்டத்தை விடுத்து,
      போர் படையிலோ
      போர் தலைமையிலோ
      பள்ளர்கள் இருந்ததாக ஒரே ஒரு சான்று காட்ட முடியுமா...?//

      => '‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். ' (http://www.thevarthalam.com/thevar/?p=1907. இந்த கட்டுரையிலும் மள்ளர்,மல்லர் இவரோரும் ஒருவரே...அது பள்ளரையே குறிக்கும் என்றும் நிறுவியாகிவிட்டது)

      => "பள்ளர் என்பது உலக வழக்கு; மள்ளர் என்பது செய்யுள் வழக்கு.இரு சொற்களும் பள்ளமான மருத நிலத்தில் வாழ்பவர் என்னும் பொருள் ஒன்றே..." -- மொழிஞாயிறு தேவநேய பாவாணர் (புத்தகம்: 'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கட்டுடைமை" பக். 125 , Ed .01 .04 . 1978 )


      மேலே சொன்ன இந்த இரண்டும் பொய் என்பதை நிறுவிட்டு வாருங்கள்...பிறகு சொல்கிறேன்...மள்ளர்கள் என்பவர்கள் ஏறும்,போரும் ஒருங்கே பெற்றவர்கள்,அவர்களின் வீரத்தை இலக்கியங்கள் எப்படி படம் பிடித்து காட்டுகிறது என்று.

      Delete
    3. @Arunkumar:
      ===========
      மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்த கண்ணோட்டத்தில் மூவேந்தர் வரலாற்றையும், ஐந்திணை மக்களையும் அணுகவும். மாற்றி யோசித்தால் குழப்பமே மிஞ்சும்.

      Delete
    4. இலக்கியங்களில் 'பள்ளர்'
      ========================
      இலக்கியங்களில்,வரலாறுகளில் 'மள்ளர்' என்ற சொல்லே பெரும்பாலும் இருந்தாலும்,'பள்ளர்' என்ற சொல் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. 'மள்ளர்' என்பது இலக்கிய வழக்கு, 'பள்ளர்' என்பது சொல் வழக்கு. இருப்பினும் 'பள்ளர்' என்ற வார்த்தை வரும் சில வரலாற்று சான்றுகள் இவை.

      திருநெல்வேலி வரலாறு:
      திருநெல் வேலி தலபுராணம்:
      செய்யுள் 48 :
      “மள்ளர்கள முதவாரிவய லெலாம் பரப்பிச்சாலி
      யொல்லியவளை களூரவுழுபக டொருங்கு மோதப்
      பள்ளநீலி டங்கடோரும் பண்ணை சூழ் வரம்பு தோறுந்
      துள்ளிய கயலை மாதர் வழியென நினைந்து சோர்வார்”

      விளக்கம்: மல்லர்கலாகிய பள்ளர்களின் வயலில் துள்ளுகின்ற மீன்களை மல்லத்தியரின் கண்களாக உவமை பாராட்டுவதாக மேற்கண்ட செய்யுள் கூறுகின்றது.
      —————————————————————–
      கோவலரைத் துயிலரங்க சரிதம்:
      பக்: 159
      செய்யுள் 29 :
      “வெள்ள மோங்கி விரிந்து பரந்தெங்
      கொள்ள கொள்ளையிற் கால்களிற் கூட்டியே
      பள்ளர் மள்ளர் பறைகள் கறங்க மீன்
      துள்ளத் துள்ள நீர் சேர்த்துச் செய் தூர்த்துவார்”
      —————————————————————-

      Delete
    5. #####போற்பயிர்ச்சி அளித்த களரியை 'பள்ளி' என்றனர். இப்பள்ளியில் படைப் பயிற்சி பெற்றவரைக் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் 'பள்ளிகள்' என்ற தனி சாதியாக்கினர். ######

      ஹஹா ..... சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) 'ஓமயிந்தன் முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்' என்பான் சம்புவராயர் குல முன்னோடி.இவன் பள்ளி குலத்தவன்.இவன் குறுநிலத் தலைவன் ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)

      அப்படியெனில் நீங்கள் சொன்ன காலத்திற்கும் நூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த இந்த பள்ளி என்போர் யார் ? வானத்தில் இருந்து வந்தவர்களா ?

      பள்ளி இனத்தின் பழைய பெயர் காடவர் ...
      அகி.பி 10 ஆம் நூற்றாண்டு முன்பே காடவர் என்னும் பெயரில் இவர்கள் ஆண்டதும் உண்டு ... மதேந்திர வர்மன் முதல் ஐயடிகள் காடவர் கோன் வரை பிற்கால பல்லவர்கள் காடவர் என்று அறியப்பட்டனர் ...

      காடவர் என்பது பள்ளி என்ற கல்வெட்டும் உண்டு ..

      காடவன் எனப் பொருள்படும் வன்ய என்ற வடமொழிப் பதத்திலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றிற்று ..

      இதை கூறியது ,

      இலங்கைப்பல்கலைக்கழக வரலாற்று
      விரிவுரையாளர்.


      கலாநிதி
      சி. பத்மநாதன் அவர்கள் .

      காடவர் பள்ளி(வன்னியர் ) என்று குறிக்கும் கல்வெட்டு :

      உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian
      Society in Transition: Ancient to Medieval" ஆய்வு நூலில் கல்வெட்டு

      ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

      குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.

      ############# ஆகையால் பள்ளர் தான் பள்ளி என்று உளறுவதை நிறுத்துங்கள் ........

      Delete
    6. #####போற்பயிர்ச்சி அளித்த களரியை 'பள்ளி' என்றனர். இப்பள்ளியில் படைப் பயிற்சி பெற்றவரைக் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் 'பள்ளிகள்' என்ற தனி சாதியாக்கினர். ######

      கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.

      "கோவிசைய மயீந்திர பருமற்கு
      யாண்டைந்தாவது காடந்தைகள்
      சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
      ஞான்று பட்டா நெருமேதிகாரி"

      (தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)

      காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.

      இதன் மூலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டளவிலேயே பள்ளி இனத்தவர் இருந்தனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

      ############ ஆகையால் பள்ளர் தான் பள்ளி என்று உளறுவதை நிறுத்துங்கள் ........

      Delete
    7. பள்ளர்--பள்ளி

      பாண்டியன் - பாண்டிமாதேவி
      சோழன் -சோழமதேவி
      சேரன் -சேரன்மாதேவி

      "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக்கனவன்"

      பள்ளரே(மள்ளர்) சேர,சோழ பாண்டியர் எனில் பள்ளி சேரமாதேவி,சோழமாதேவி,பாண்டிமாதேவி.
      பள்ளர்(மள்ளர்) புருஷன் பள்ளி(மள்ளி) மனையாள். இதை புரிந்து பள்ளனுக்கு பள்ளிதான்.
      பள்ளிக்கு பள்ளன் தான் என மணப்புரிதல் வேண்டும்.
      கணவன் மனைவிக்குக்கு மிடையில் வேற்றுமை கூடாது.
      சிவன் இல்லையேல் சக்தியில்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை

      Delete
    8. உங்க அம்மா உங்க அப்பனுக்கு தான் உன்ன பெத்தான்னு நீ சொல்லுற. அதுக்கு ஆதாரம் இருக்கா இருந்தா சான்று காட்ட முடியுமா

      Delete
    9. தமிழர்களின் தாய் குடி மள்ளர்கள்

      Delete
  4. பாகிஸ்தானில் உள்ள காலாடி
    ---------------------------
    http://www.facebook.com/search/results.php?q=kaladi+pakistan&init=quick&tas=0.8493846369074013

    ReplyDelete
  5. பள்ளனின் மரபு வழி குடும்பம்
    ----------------------------
    http://www.familyhistory.com/surnames.asp?surname=Pallan&d=Pallan+genealogy

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழா

      Delete
    2. பள்ளர் பள்ளிக்கு உள்ள தொடர்பு இரண்டும் பள்ள ஆற்று சமவெளியை உழுத மருதக்குடிகள் பள்ளர் பாண்டிய வம்சம் வன்னியர் சேர சோழ பல்லவ வம்சம் யார் மறுத்தாலும் இது தான் உண்மை வரலாற்றை படி அவரவர் சாதி லட்சனங்களை தெரிந்து கொள்ளுங்கள்

      Delete
  6. பள்ளனின் மரபு வழி குடும்பம் (2)
    -------------------------------
    http://www.ancientfaces.com/surname/pallan-family-history/393299

    ReplyDelete
  7. @ArunKumar
    -----------
    //இப்போது இருக்கும் பள்ளர் தான் மள்ளர் என்பதற்கு என்ன ஆதாரம்?//

    பள்ளன் அல்லாதோர் 'பள்ளனே' மள்ளன் என்பதை பற்றி கூறுபவை:
    ================================================
    => முனைவர் வின்சுலோ (இவர் பள்ளன் இல்லை)
    “இன்று தென்னகத்தில் வேளாண் தொழில் புரிந்து வரும் பள்ளர்கள், மள்ளர் என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். (Dr . Winslow Dictionary pp 745 )

    => டி.கே.வேலுப்பிள்ளை (இவர் பள்ளன் இல்லை)
    பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர் (T K Veluppillai , Travancore State Manual 1940 )

    => முனைவர் ஹோபர்ட் (இவர் பள்ளன் இல்லை)
    மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும் (Dr . G .Hobbart ,Dravidians The Original Inhibitants of India , pp 101 )

    => தேவநேய பாவாணர் (இவர் பள்ளன் இல்லை என்று தேவர்தளம் சொல்லுது)
    பள்ளர் என்பவர் மள்ளர், மருத நிலத்தில் வாழும் உழவர் (செந்தமிழ் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு)

    => ந.சி.கந்தையாபிள்ளை (இவர் பள்ளன் இல்லை)
    பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மல்லரே இன்றைய பள்ளர் (தமிழர் சரித்திரம் பக் 206 )

    => '‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். ' (http://www.thevarthalam.com/thevar/?p=1907. இந்த கட்டுரையிலும் மள்ளர்,மல்லர் இவரோரும் ஒருவரே...அது பள்ளரையே குறிக்கும் என்றும் நிறுவியாகிவிட்டது)

    => "பள்ளர் என்பது உலக வழக்கு; மள்ளர் என்பது செய்யுள் வழக்கு.இரு சொற்களும் பள்ளமான மருத நிலத்தில் வாழ்பவர் என்னும் பொருள் ஒன்றே..." -- மொழிஞாயிறு தேவநேய பாவாணர் (புத்தகம்: 'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கட்டுடைமை" பக். 125 , Ed .01 .04 . 1978 )

    ReplyDelete
    Replies
    1. கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா???? சகோ 🤣🤣

      Delete
  8. கிரீசில் உள்ள மள்ளன்
    ---------------------
    http://www.facebook.com/search/results.php?q=malla+greece&init=quick&tas=0.19413320409120854

    ReplyDelete
  9. பள்ளனே மருத நிலத்தவன் என்ற தொல்லியல் ஆய்வு முடிவுகள்
    ================================================

    இனி எந்த காலத்துக்கும் யாரும் மறுக்க முடியாத, பள்ளனே மருத நிலத்தவன், அவனில் தொடங்கியே பாண்டியனும், அவனை தொடர்ந்து சோழனும்,சேரனும் வந்தனர் என்பதை ‘மானுடவியல்’ ஆராய்ச்சி வல்லுநர் ஒரிசா பாலு அவர்கள் (இன்றும் நடத்திக் கொண்டு இருக்கும்), “தமிழரின் கடல் மேலாண்மை” என்ற ஆய்வினை பற்றிய வீடியோ லின்க்குகள் இவை. ஒரிசா பாலு ‘பள்ளன்’ அல்ல. ஆனால் அவருடைய கடல் சார் ஆய்வுகள் அனைத்தும் பள்ளனே நெல் நாகரிகம் கண்டவன், அவனே இவ்வுலகம் முழுதும் பரவி நெல் நாகரிகத்தையும், அதை தொடர்ந்து அரசையும் நிறுவினான் என்பதை வெறும் பேச்சாக அல்ல, தொல்லியல் ஆய்வுகளின் தரவுகளோடு நிறுவியுள்ளார். இந்த ஆய்வின் அறிக்கை வெகு விரைவில் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் சமர்ப்பிக்கப் படுகிறது.

    Videos
    =======
    http://www.youtube.com/watch?v=kswd9cgMZlI&feature=plcp
    http://www.youtube.com/watch?feature=endscreen&v=a9mQZm1ZyH8&NR=1
    http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=sx900kXGKig

    Facebook account
    ================
    http://www.facebook.com/orissa.balu?fref=ts

    ReplyDelete
  10. பிலிபைன்சில் பள்ளன்
    --------------------------------
    http://www.facebook.com/search/results.php?q=pallan+philippines&init=quick&tas=0.8361994547202733

    ReplyDelete
    Replies
    1. அதே பிளீப்பைன்ஸ் நாட்டுக்காரன் தான் சோழன் பரை(றை)யன் என்று சொல்லுகிறான். சோழன் பரை(றை)யர் என்பதற்க்கான கல்வெட்டு ஆவணம் உள்ளது. அரசு தொல்லியல் ஆவணம் உள்ளது.

      Delete
  11. //இது எப்படி மேல் சாதி..? இது எப்படி கீழ்சாதி...? எனும் பகுத்தறிவுக் கேள்வியைக் கேட்டதில்லை.//

    தி.க ஆளுங்களுக்கு தெரிஞ்சுது எல்லாம் ரெண்டே ரெண்டு சாதி தான்...என்ன சொல்றாங்கன்னா.....
    1 . திராவிடன் (கருப்பா குட்டையா கனமா சுருட்டை முடி வச்சிருக்கிற எல்லாருமே திராவிடன் தான். முதலில் இவன் தன்னை திராவிடனகத் தான் உணர்ந்தான். பிறகே இவன் தன தேவைக்காக ஒரு கருவியாக தமிழை கண்டுபிடித்தான்).
    2 . ஆரியன் (பூணூல் போட்டுக்கிட்டு ,வர்ணாசிரமம் பேசி வருபவன். இவன் தான் சாதியை கண்டுபிடிச்சான். இவன் தான் OC ,BC ,SC ன்னு பிரிச்சான்)

    இப்படி தமிழனும் திராவிடம் பேசினதால் என்ன மிஞ்சியது என்று ஒரு உதாரனத்திற்க்கு சொல்கிறேன்.

    ஈ.வே.ராமசாமி நாயக்கர் (வடுக பலிஜா நாயுடு)
    இராஜாஜி (வடுக தெலுங்கு பிராமணர்)
    முத்துவேலர் தட்சிணாமூர்த்தி (எ) கருணாநிதி (வடுக தெலுங்கு சின்ன மேளம்)
    கோமளவல்லி அய்யங்கார் (எ) ஜெயலலித்தா (வடுக கன்னடர்)
    கோபால்சாமி நாயுடு (எ) வைகோ(வடுக தெலுங்கர்)
    விஜராசு நாயுடு (எ) விஜயகாந்த் (வடுக தெலுங்கு பொட்டுகட்டி)

    இப்படி ஆளும்,எதிர் என அனைத்து மட்டத்திலும் தமிழனை தவிர அனைவரும் அரசியல் செய்ய விட்டது தான் திராவிடம் பேசுவோரின் வெற்றியும், திராவிடம் பேசும் தமிழனின் தோல்வியும்....!!!

    ReplyDelete
  12. there is no such special names called pillai or mudhali for mallar....///check ur post

    ReplyDelete
  13. உண்மை தான் பள்ளர்களே பள்ளி இன மக்களின் மூத்தோர்.வன்னியர் போற்றும் வையா பாடலும் வன்னியரை பள்ள சாதி என்றே கூறுகிறது.குறும்பர்,இருளர்,பள்ளி எல்லோரும் பள்ளர் தான்.இவர்களில் இருந்து உருவானவர்கள் தான் வன்னியர் என்று தற்போது உள்ள இனம்,இவர்களின் (பள்ளர்,பள்ளி)உருவ அமைப்பும் ஒன்றே போல் இருக்கும்.பள்ளரில் இடையராக கமத் தொழில் விவசாயம் செய்வோராக இருப்போரே பள்ளி என்றும் படையாட்சி என்றும் வன்னியர் என்றும் கூறிக்கொள்ளும் வன்னியர்.
    தெற்கே வன்னியரும் தேவேந்திரரும் ஒருதாய் மக்கள் என்றே ராமதாஸ் கூட்டத்தினர் போஸ்டர் ஓட்டுவார்கள் எண்பதுகளில்,வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் என்றது வெறும் கூற்று கிடையாது வரலாற்று உண்மை அறிந்தே ராமதாஸ் அப்படி கூறியுள்ளார்.இந்தியா முழுமையும் பள்ளர்களின் இனம் பரவியுள்ளது.அவ்வாறு பரவிய இனத்தோரில் வட இந்தியாவில் கூட வன்னியர் என்று கூறும் மக்களும் பள்ளர் இனமும் ஒரே கிளையாக இருப்பார்கள்.பள்ளர்களின் இடைக்கால பொருளாதார தாழ்வு நிலை சமுதாய சூழலில் கீழ் நிலைக்கு கொண்டு சென்றது,அதே சமயம் தங்களது பொருளாதாரத்தை தக்க வைத்து அந்தஸ்தாய் வாழ்ந்த வன்னியர் தாங்கள் பள்ளர்கள் என்று பெருமையுடன் ஒத்துக்கொள்ள மறுத்தே வன்னியர் குல சத்திரியர் என்று கதை புனைந்து அரசாங்கத்தில் அழுது புரண்டு இருவரையும் தனித்தனியாக காட்டிக்கொண்டனர்.ஆனால் சத்திரியர் பட்டம் பெற அவர்கள் காட்டிய ஆதாரம் அவர்களின் முன்னோராகிய பள்ளர்கள் உடையது தானே,அவர்களின் பெருமையைத்தானே.பள்ளசாதியில் ஒரு பிரிவினரே பள்ளி,பள்ளி முற்றி படையாட்சி படையாட்சி முற்றி வன்னியர் வன்னியர் முற்றி கவுண்டர் என்பது வழக்கு.படையாட்சி என்போர் கமத்தொழில் புரிவோர் என்றே வருகிறது.கமத்தொழில் என்பது உழவுத்தொழில்.இன்றைக்கும் இவர்கள் வட மாநிலங்களில் பள்ளரைவிட பொருளாதாரத்தில் நாகரிகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளனர்.வன்னியர் பள்ளர் இருவரும் குடிப்பிறப்பின் ஒற்றுமையால் ஒன்றிணைந்து வளர்ச்சி பெற்ற சமுதாயமாக வாழ வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பள்ளர்--பள்ளி

      பாண்டியன் - பாண்டிமாதேவி
      சோழன் -சோழமதேவி
      சேரன் -சேரன்மாதேவி

      "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக்கனவன்"

      பள்ளரே(மள்ளர்) சேர,சோழ பாண்டியர் எனில் பள்ளி சேரமாதேவி,சோழமாதேவி,பாண்டிமாதேவி.
      பள்ளர்(மள்ளர்) புருஷன் பள்ளி(மள்ளி) மனையாள். இதை புரிந்து பள்ளனுக்கு பள்ளிதான்.
      பள்ளிக்கு பள்ளன் தான் என மணப்புரிதல் வேண்டும்.
      கணவன் மனைவிக்குக்கு மிடையில் வேற்றுமை கூடாது.
      சிவன் இல்லையேல் சக்தியில்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை

      Delete
  14. Melum Thamil varalaru, ariya kalapukupin thamil varalaraium opunokuka, Thamilargalin ottrumai ariyarkalal(bramins) seerkulaikapadukirathu.....
    Kurunchi
    Mullai
    Marudam
    Neithal
    Paalai
    anaivarum thamilargale

    ReplyDelete
  15. உலகமெங்கும் உள்ள மனிதர்கள் அனைவரும் ஓரினமே.ஆனால் பள்ள சாதியினர் அனைத்து தமிழ் சாதிகளுக்கும் அப்பா வேஷம் போடுவது மிகவும் தவறு.இது தமிழ் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க வழிவகுக்கும்.அல்லது பள்ளர் மீது வெகு சன மத்தியில் வெளியில் சொல்லப்படாத வகையில் ஒரு காழ்ப்புணர்ச்சி உண்டாக்கும்.முக்குலத்தோர் செய்த தவறு இதே தான் அதனால் தான் அவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கும்,.ஆனால் அவர்களுக்காவது வரலாறு இருந்தது.இருக்கிறது.உங்களுக்கு போலியாக பொய்யாக வரலார்ரையே திருத்தி எழுதிக் கொள்கிறீர்கள்.இது இனத்துரோகம் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. இங்கு சொல்லப்பட்ட அனைத்து செய்திகளுக்கும் சான்றுகள் உண்டு. உண்மையை சொன்னால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள் ஒற்றுமை குலையும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது... கருத்தியல் ரீதியாக எதையும் சான்றுகள் கொண்டு பேசினால்தான் உங்களின் பேச்சு பொருள் கொண்டதாக இருக்கும். சாதிக் காழ்ப்புணர்வை தவிர்த்து வரலாற்றை வரலாறாகப் பார்க்கவும். தவறு இருப்பின் தக்க சான்றுகளோடு மறுக்கவும். வீண் இகழுரைகளைத் தவிர்க்கவும்.

      http://mallarchives.blogspot.in/
      http://maruppukalam.blogspot.in/

      Delete
    2. பள்ளர்--பள்ளி

      பாண்டியன் - பாண்டிமாதேவி
      சோழன் -சோழமதேவி
      சேரன் -சேரன்மாதேவி

      "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக்கனவன்"

      பள்ளரே(மள்ளர்) சேர,சோழ பாண்டியர் எனில் பள்ளி சேரமாதேவி,சோழமாதேவி,பாண்டிமாதேவி.
      பள்ளர்(மள்ளர்) புருஷன் பள்ளி(மள்ளி) மனையாள். இதை புரிந்து பள்ளனுக்கு பள்ளிதான்.
      பள்ளிக்கு பள்ளன் தான் என மணப்புரிதல் வேண்டும்.
      கணவன் மனைவிக்குக்கு மிடையில் வேற்றுமை கூடாது.
      சிவன் இல்லையேல் சக்தியில்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை

      Delete
  16. தம்பிக்கு புத்தி கலங்கிி விட்டது

    ReplyDelete
  17. pongada ningalum unga sathium ........na thamizhanda.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Palli is a prakrit word which mostly refers a holy place or something sacred. eg: Raja Raja perumpalli, Palliyarai (prominent place in temple where god persist), Pallivaasal (Religious place for Muslims still now), Palli kudam(school still now). But pallar is a tamil word derived from the word 'pallam' which means low land.

    Palli Velan Nakkan Pullan commander in chief of Varguna Varman a pandiyan king ruled from 862 to 880 (வரகுண வர்மன் கி. பி. 862 முதல் 880 வரை ). from that we know the word palli is used even from 8th century AD. and it also referred as a caste name

    pullan :https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D
    varguna varman:https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D

    ReplyDelete
  21. வேளாளர் என்ற பெயர் பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு சொந்தமானது அவர்களின் சாதி பெயர் வெறும் தேவேந்திர குலத்தான் தா பள்ளர் கூட்டத்து மக்களின் சாதிப்பெயர் நீ வேளாளர் அவங்க சாதி பெயர பயன்படுத்து ரீங்க நீங்க அந்த வேளாளர் களிடம் என்னவா இருந்தீங்க அப்பிடிங்கிறதா நல்லா தேடிபாரு உனக்கே நீ யாருனு புரியும் வேளாளர்களின் வரலாற்றை திருடமவதை நிறுத்துகயா முதல. நீங்கதா எல்லாமேவா சூப்பர் கற்பணை முக்குலத்து ஆளுக மாதிரி காமெடி பண்ணாதிங்க பாஸ் அவங்கே தா ஊர்ல உள்ள சாதிய பூரா அவங்க மானு சொல்லுவாங்கே இது போக அரசர்கள் பூரா அவே சாதி மாதிரியே பேசுவாங்கே அதே மாதிரி இருக்கு முக்குவர் எனும் முக்குலத்தோர் சூத்திரர்களாக பணிக்கப்பட்டதனை மறந்து தங்களை சத்திரியர் என நினைத்துக் கொண்டு மற்றவர்களை உண்மைக்கு புரம்பாக சூத்திரர்கள் என எழுதிவருவதும் கூறிவருதும் வருத்தமாக உள்ளது அவர்களின் அறியாமையை நினைத்து சாணார் இலங்கையிலிருந்து பண்ணை பணிக்காக சேரமன்னனால் கேரள பகுதிக்கு அழைத்து வரப்பட்ட வந்தேறி கூட்டம் தங்களை போல் தான் தமிழ் இன வரலாற்றில் பள்ளர் மள்ளர் என்பதை சங்க காலம் இடைகால இலக்கியங்களிலோ வரலாறுகளிலோ ஏன் கடைகாலத்தின் துவக்க காலத்தில் கூட காணமுடியவில்லை நீங்கள் தான் எல்லாம் என தாங்கள் கூறும் போது பிள்ளை முதலி எனும் சாதி புதிதாக தோன்றியதா வேளாளர் என்பது அவர்களின் சாதி பெயர் அவர்கள் மட்டுமே அதிகப்படியாக முக்கால இலக்கியங்களில் வரலாறுகளில் காணப்படுகின்றனர் பெருமையாக பேசபடுகின்றனர். பிள்ளைமுதலி என்போரிடம் புதிதாய் ஒரு கூட்டத்தார் பண்ணை வேலையாட்களாக பணிக்கப்பட்டிருந்தனர் அவர்கள் யாரென தங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைமார் என்பர் குடும்பர்கள் வீட்டில் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஒரு பிரிவு

      Delete
    2. வில்லவர் மற்றும் பாணர்
      ____________________________________

      பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

      கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

      வில்லவர் குலங்கள்

      1. வில்லவர்
      2. மலையர்
      3. வானவர்

      வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

      4. மீனவர்

      பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

      1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

      2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

      3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

      4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


      பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

      வில்லவர் பட்டங்கள்
      ______________________________________

      வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

      1. சேர வம்சம்.
      2. சோழ வம்சம்
      3. பாண்டியன் வம்சம்

      அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

      முக்கியத்துவத்தின் ஒழுங்கு

      1. சேர இராச்சியம்

      வில்லவர்
      மலையர்
      வானவர்
      இயக்கர்

      2. பாண்டியன் பேரரசு

      வில்லவர்
      மீனவர்
      வானவர்
      மலையர்

      3. சோழப் பேரரசு

      வானவர்
      வில்லவர்
      மலையர்

      பாணா மற்றும் மீனா
      _____________________________________

      வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

      பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

      பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

      அசாம்

      சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

      இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

      மஹாபலி

      பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

      வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

      ஓணம் பண்டிகை

      ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

      பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

      சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

      பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

      இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

      ஹிரண்யகர்பா சடங்கு

      வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
      ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

      Delete
    3. காமெடி வலாறு

      Delete
  22. //தமிழ் இன வரலாற்றில் பள்ளர் ,மள்ளர் என்பதை சங்க காலம் இடைகால இலக்கியங்களிலோ வரலாறுகளிலோ ஏன் கடைகாலத்தின் துவக்க காலத்தில் கூட காணமுடியவில்லை//

    SHIVA SANKAR அவர்களே சங்க இலக்கியங்கள் , கல்வெட்டுகள் எல்லாவற்றையும் நன்கு படித்துவிட்டு இங்கு வந்து கூறுங்கள். அதை விடுத்து சிறு பிள்ளை தனமாக சங்க இலக்கியங்களில் மள்ளர் என்ற சொல் இல்லை என்று கூற வேண்டாம்.


    மூவேந்தர் ஆட்சி செய்த காலத்தில் நீங்கள் என்ன பெயரில் அழைக்கப்பட்டீர்கள் என்று கூற முடியுமா? மேலும் மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் இயற்றப்பட்ட நிகண்டுகளில் உங்கள் சமூகம் எந்த நிலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டீர்கள் என்று விளக்க முடியுமா?.


    வேளாளர் என்ற பெயர் மருத நிலத்தில் ஆதியில் உழவு செய்த வேளாண் குடியான மள்ளர் குடியைத்தான் குறிக்கும். இன்று வேளாளர் என்று கூறுபவர்கள் எல்லோரும் ஆதி வேளாளரிலிருந்து பிரிந்து சென்றவர்கள். அல்லது அன்னிய படை எடுப்புக்குப் பின் ஏற்றம் பெற்ற வேற்று மொழி பேசுபவர்களில் கலப்பு இனம். இதை தவிற்த்து தமிழகத்தில் உங்களுக்கு வேறு வரலாறு இருந்தால் தாராலமாக கூறலாம்.


    உங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்க வில்லை என்றால். மேஜர் கதிர் மகா தேவன் முன்னால் தஞ்சை பல்கலைகலக துணை வேந்தர், மற்றும் V. சேகர் இயக்குனர் சினிமா துறை போன்ற உங்கள் சமூக அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி ஆதின்னு சொல்லுரியே அது யாரு தெரியுமா ஆதி குடும்பன் ஆதிச்சநல்லூர் ஆராச்சி சொல்லும் போ

      Delete
  23. காச வாங்கிட்டு பள்ளர்களுக்கு ஒரு வரலாறு எழுத வேண்டுமே என உங்கள் கடமையை செய்கிறீர்கள். இதில் காலாடி கடுங்கோல்மால் செல பாண்டி மளர் சார் என உதிரம் சிந்தி வியர்வை சிந்தி உழைக்கும் மக்களுக்கு எக்சார்சிஸ்ட் பாதிரியார் அகத்திய சித்தர் குருசாமி வாழ்த்து என்றைக்கும் உண்டு. ஆனால் விஷயம் என்ன வென்றால் பள்ளர் என ஆனித்தரமான கல்வெட்டுகள் இராச இராச சோழன் காலத்திலிருந்து சாலிடாக கிடைக்கிறது. அந்த கல்வெட்டுகளை நீங்களே தீட்டு என ஒதிக்கி கல்வெட்டில் பள்ளன் என வந்தால் அதை ஏற்க்க கூடாது என என்னும். பள்ளர்கள் இல்லாத மள்ளர் என்ற பெயரை மல்லர் என்னும் பெயரோடு தொடர்பு படுத்தி அதைக்கோர நினைக்கும் உங்களுக்கு பள்ளன் என கல்வெட்டு வந்தால் அது தீட்டு பள்ளர் நாங்கள் கிடையாது நாங்கள் மள்ளர். பள்ளர் எனும் வார்த்தை பள்ளனுக்கே தீட்டு எனில் கல்வெட்டில் பள்ளன் என வந்தவன் யாராக இருப்பான் ஒருவேளை ஐயர்,தேவர்,நாயக்கர்,பிள்ளை,முதலி போன்ற ஏதோ தீட்டு சாதியாக தான் இருப்பான் போல. கல்வெட்டில் பள்ளன் இன்றைய பள்ளன் கிடையாது கல்வெட்டில் மள்ளன் ச்ச்சாரி மல்லன் என்பவனே பள்ளர் ஓகே. தீட்டுக்கே தீட்டு இருக்கும் போது மற்றவர்களை என்ன சொல்வது. ஒரு சிறு வின்னப்பம் தங்களது வலைதளத்தில் கல்வெட்டு என்னுடன் கூடிய படத்தை இனைக்க முடியும் அல்லவா அதில் இவ்வூர் மல்லர்களில் அல்லது இவ்வூர் மள்ளர்களில் அல்லது இவ்வூர் தேவந்தர்களில் என ஏதாவது ஒரு கல்வெட்டு ஆவனத்தை இனைத்தால் புன்னியமாக இருக்கும்.

    200 வலைதளங்கள் ஆரம்பித்த பின்னும் இன்னும் உங்களுக்கு எந்த ஆதார அங்கிகாரம் கிடைக்கவில்லை.
    கோசர்,எயினர்,மழவர்,ஒளியர்,வில்லவர்,ஓவியர்,திரையர் இவர்கள் இனங்கள் எல்லாம் எப்படி கானாமல் போனதோ அதே மாதிரி மக்களுடன் கலந்து காணாமல் போன இனம் தான் மள்ளர்.

    இதை எங்கு தேடினாலும் கிடைக்காது ஆனால் பள்ளர் எனும் கல்வெட்டு சொல் கடந்த 1200 வருடங்களாக வருகிறது. கடையர் என்னும் சொல் 2000 வருடமாக வருகிறது. நீங்களாவது கடையர்,பள்ளர் எனும் பெயர்களை தீட்டு பார்க்காமல் ஏற்று கொள்ளுங்கள் இல்லையேல் அந்த பெயரை யார் ஏற்பது.

    இன்னோன்று பள்ளர்கள் தேவேந்திர வெள்ளாளர் ஆனது மாதிரி உவச்ச பறையர் இசைவேளாளராக மாறியதைபோல் சோதிட பறையர் வள்ளுவ வேளாளராக மாறியதுபோல் சக்கிலியர் அருந்ததிய வேளாளராக? அம்பட்டர் மருத்துவ வேளாளராக? வன்னார் சிறுதொண்ட வேளாளராக எப்போது மாறுவர் என ஒரு ஆருடம் கூறுங்கள் பாண்டிய பள்ளர் அல்லது மள்ளர் அல்லது குடும்பர் அல்லது காலாடி அல்லது பன்னாடி நன்பா

    ReplyDelete
    Replies
    1. வந்தேரி நாயே தமிழ பத்தி நீ பேசாத.

      Delete
    2. நீ தாலன் வந்தேரி உண் பூர்விகம் பரத கண்டம் கிடையாது லெமூரியா கண்டம் ஆப்ரிக்கா நீ யாரல வந்தேரிங்கிற உண் வரலாற பத்தி நீங்கள் தாண் பெருமையா பேசிகிரனும் உண் வரலாற நீ படி ம்ம் உண் அடிமை வரலாற்றை

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. பாரதம் படித்தல் என்பது தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். பாரதம் படித்தல் பொதுவாக கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி அம்மன் கோவில்களில் முக்கிய நிகழ்வாகும். திருவிழா சாட்டியதிலிருந்து பதினெட்டு நாட்கள் தினமும் கோவில் திடலின் ஒரு புறத்தில் அமைக்கப்பட்ட மேடையில் மகாபாரதம் நூலைப் படிப்பர். செய்யுள்வடிவில் அமைந்த பாடல்கள் பாடி விளக்கமளித்தல், கதை நிகழ்வுகளைச் சொற்பொழிவாகச் செய்தல், பாடலும் விளக்கமும் இணைந்த கதாகாலட்சேபம் எனும் வடிவில் பாரதம் படித்தல் நிகழும்.

    பொருளடக்கம் [மறை]
    1 வரலாறு
    2 திரௌபதி அம்மன்
    3 வன்னிய புராணம்
    4 உசாத்துணை
    5 மேற்கோள்கள்
    6 வெளியிணைப்புகள்
    வரலாறு[தொகு]
    சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் கி. பி ஏழாம் நூற்றான்டில் பகைமை வளர்ந்தது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டான். பாதாமி நகர் (இது கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி என அழைக்கப்படுகிறது) அழிக்கப்பட்டது.

    திரௌபதி அம்மன்[தொகு]
    நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள் ஆவர். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்றவர் வன்னியர் குலத்தைச் சேர்ந்த பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் ஆவார். இத்தாக்கத்தினால் வன்னியர்களிடையே அவர்கள் வாழும்பகுதிகளில் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாக ஏற்படத்தொடங்கியது.[1] பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்தது. பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.[2]

    வன்னிய புராணம்[தொகு]
    இத்தாக்கத்தின் விளைவாக வன்னிய புராணம் என்ற ஒரு கதையும் உருவானது. வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம், வன்னியர்களிடையே கதையாகப் பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன், வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை வன்னியக்கூத்து என்ற பெயரில் கூத்தாகவும் நடத்தப்படுகிறது. வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை, பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகளுடனும் கூத்தாண்டவருடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.

    வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை பல்லவ மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.[3] பாரதக் கதையின் பாதிப்பால் உருவான திரௌபதி அம்மன் கோவில்களிலும், கூத்தாண்டவர் கோவில்களிலும் பாரதம்படித்தல் என்பது இன்றும் ஒரு பண்பாட்டு மரபாக விளங்கி வருகின்றது.

    ReplyDelete
  27. நீங்கள் கூறுவதற்கு முறையான சான்றுகள் இல்லை என்பது மட்டும் புரிகிறது.

    உங்கள் வெளிப்பாடு உண்மையென்றால் காலத்தையும் அதற்குரிய இலக்கிய சான்றுகளை கூறுங்கள்

    ReplyDelete
  28. பள்ளா்கள் வேறும் வரலாற்றில்வி விவசாய ௯லி மட்டுமே ௬ம்மா காமடி பன்ன வேண்டாம் இரண்டாவது கரையாா் பரதவர் ஆண்ட ஜாதி உங்களை அவர்களோடு ஒப்பிட வேண்டாம்

    ReplyDelete
  29. மிகப் பெரிய comedyயாக உள்ளது பள்ளர்கள் வரலாற்றில் விவசாய ௯லிகள் மட்டும் தான் ஆன்ட ஜாதியேல்லாம் கிடையாது ஐந்து தினை வாழ்ந்த மக்கள் பெயரில் ம௫தம் உழவர் என்றுதான் உள்ளது பள்ளர் என்றோ மள்ளா் என்றோ கிடையாது ம௫த நிலமே உங்களுக்கு சொந்தமானது கிடையாது வரலாற்றில் பள்ளர் விவசாய ௯லிகள் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஓத்தா கூலி போடா வென்ன

      Delete
  30. மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள உறவு
    இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.

    இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    * பள்ளர்
    * வன்னியர்
    * நாடார்
    * அம்பலக்காரர்
    * கொங்கு வெள்ளாள கவுண்டர்
    * இசுலாமிய மக்கள்
    * வீரக்கொடி வெள்ளாளர்
    * அய்யர்/அய்யங்கார்
    * வங்க பிராமணர்
    * மீனவர்
    * ரெட்டியார்
    * நாயுடு
    * மறவர்
    * கள்ளர்
    * அகமுடையார்

    இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.

    ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது.

    அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10சாதிகள் உள்ளன.

    கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன.

    இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது.

    மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.

    இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர்.
    மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) மீதமுள்ளவர்கள் திராவிடர்கள்.

    . நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.

    இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.

    ஆதாரம்:
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீங்கள் செல்வதை பார்த்தால் நாடார் மட்டுமே மதமும் மாறினாலும் கலப்பு இல்லாமல் இருக்கும் ஒரே சாதி இவர்களே சேர சோழ பாண்டியரகள் என்பதில் சந்தேகமில்லை ஏன் என்றால் அக்கால மன்னர்கள் முதல் மனைவியை தன் சமுகத்தில் எடுப்பார்கள் அவர்களின் வாரிசுக்குத்தான் அடுத்த மன்னர் பதவி வைய்ப்பாட்டியாக எத்தனை பெயர் இருப்பார்கள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வேறு ஜாதி பட்டம் பெற்றவரகள் அது போதுவாக பிள்ளை என்ற பட்டம் இதற்கு ஆதாரம் நிரைய உள்ளது

      Delete
  31. மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள உறவு
    இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.

    இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    * பள்ளர்
    * வன்னியர்
    * நாடார்
    * அம்பலக்காரர்
    * கொங்கு வெள்ளாள கவுண்டர்
    * இசுலாமிய மக்கள்
    * வீரக்கொடி வெள்ளாளர்
    * அய்யர்/அய்யங்கார்
    * வங்க பிராமணர்
    * மீனவர்
    * ரெட்டியார்
    * நாயுடு
    * மறவர்
    * கள்ளர்
    * அகமுடையார்

    இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.

    ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது.

    அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10சாதிகள் உள்ளன.

    கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன.

    இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது.

    மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.

    இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர்.
    மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) மீதமுள்ளவர்கள் திராவிடர்கள்.

    . நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.

    இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.

    ஆதாரம்:
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

    ReplyDelete
  32. முட்டாள்தனமான பதிவு.....வேளாண் குடி பள்ளனுக்கும்.....போர் குடி வன்னியகுல சத்ரீயனுக்கு சம்பந்தமே இல்லை.....
    இங்கு பள்ளி வாங்கியதை வைத்து உறவு கொள்ள வேண்டாம்......

    ReplyDelete
    Replies
    1. சகோதரா நானும் ஒரு வன்னியந்தான் , மருத நிலத்திலிருந்து தான் நில உடைமை தோன்றியது அதை காக்க நிர்வாகிக்க அரசுகள் தோன்றியது அதன் தேவையின் பொருட்டு பல தொழில் குடிகள் தோற்றம் பெற்றிருக்கும் , மருத நிலத்தின் ஆதி குடி பள்ளர்கள் (உணவு உற்பத்தி நில மேம்பாடு ) அதிலிருந்து தான் நிலத்தை பாதுகாக்கும் போர் சமூகமான (பள்ளி --> படையாச்சி --->கௌண் டர் --->அரசு ) வன்னியர் (வன்னி=வன்மை =வல்லமை ) சமூகம் தோன்றியிருக்க முடியும் மரபணு ஆய்வும் இதைத்தான் சொல்கிறது

      5 திணைகளை ஆய்வு செயது பாருங்கள் உண்மை விளங்கும்

      ஆதி குடி குறிஞ்சி நில குறவன் >பறையன்>இடையன் >பள்ளன் >பிற சாதி கிளைகள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. முட்டாள் காடு வெட்டியார்ட கேளுடா நம்ம யாருன்னு

      Delete
  33. வரலாற்றை பதிவு இடுபவர் கவனத்திற்கு தயவுசெய்து ஆளாளுக்கு குழப்ப வேண்டாம் கல்வெட்டு ஆதாரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் அரை குறையாக உங்களுக்கு முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வாதம் செய்யாதீர்கள் கல்வெட்டு ஆதாரங்கள் தற்போது அதிகம் உள்ளது யூகத்தின் அடிப்படையில் எழுதிய புத்தகத்தை வைத்தது வாதம் செய்யாது இருத்தல் அவசியம் சங்ககால நூல்களை படித்து பாருங்கள் அதில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன அதை பயன்படுத்தி கொள்ளலாம்

    ReplyDelete
  34. வரலாற்றை பதிவு இடுபவர் கவனத்திற்கு தயவுசெய்து ஆளாளுக்கு குழப்ப வேண்டாம் கல்வெட்டு ஆதாரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் அரை குறையாக உங்களுக்கு முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வாதம் செய்யாதீர்கள் கல்வெட்டு ஆதாரங்கள் தற்போது அதிகம் உள்ளது யூகத்தின் அடிப்படையில் எழுதிய புத்தகத்தை வைத்தது வாதம் செய்யாது இருத்தல் அவசியம் சங்ககால நூல்களை படித்து பாருங்கள் அதில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன அதை பயன்படுத்தி கொள்ளலாம்

    ReplyDelete
  35. கரிவலந்த நல்லுர் கல்வெட்டு என்ன சொல்கிறது மழை பெய்ய விடமல் தடுத்த இந்திரனை சிறை பிடித்தார்கள் சேர சோழ பாண்டியர்கள் (மழைக்ககடவுள்)இந்திரன் அப்போது நடந்த சன்டையில் பாண்டியன் கோபம் கொண்டு இந்திரன் மகன்கள் நாலு பேரையும் என்பது(நாலாயிம்)பெயரயும் சிறைபிடித்து வரும்போது விதைகளையும் கொண்டு வந்தார் இதுதான் கல்வெட்டு சொல்லும் செய்தி அப்படி என்றால் சேர சோழ பாண்டியர் மூவருக்கும் இவர்கள் அனைவரும் அடிமை இவர்கள் சேர சோழ பாண்டியர் இல்லை என்பதற்கு கரிவலந்த நல்லுர் கல்வெட்டு முக்கியமான ஆதாரம் கரிவலந்த நல்லுர் கல்வெட்டில் உள்ள செய்தியை இவர்கள் முழுமையாக போடாமல் ஆவர்களுக்கு தேவையான வரிகளை மட்டும் போடும் போதே தெரிகின்றது இவர்கள் அனைவரும் வரலாற்றை மறைக்கும் கும்பல்

    ReplyDelete
    Replies
    1. இந்திரனை எங்கு இருந்து கைது செய்து கொண்டு வரபட்டனர்

      Delete
  36. வேளாளர் எனப்படுவோர் சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தையே சார்ந்துள்ளனர். சைவ வேளாளர், கொங்கு வேளாளர், போன்றோர்களில் பலர் முறையே பிள்ளை, கவுண்டர், என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவற்றில் விதிவிலக்கும் உண்டு...


    பொருளடக்கம்
    1 வேளாளர் விளக்கம்
    2 பட்டங்கள்
    3 சைவ வேளாளர்
    3.1 உட்பிரிவு சாதியினர்
    4 மேற்கோள்கள்
    5 வெளி இணைப்பு
    வேளாளர் விளக்கம்
    வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும்.

    வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, சேக்கிழார், என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.[1]

    பட்டங்கள்
    வேளாளர் இன பட்டங்கள்

    பிள்ளை
    முதலியார் அல்லது முதலி
    கவுண்டர்
    உடையார்
    தேசிகர்
    குருக்கள்
    ஓதுவார்
    சைவ வேளாளர்
    இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

    உட்பிரிவு சாதியினர்
    ஆதிசைவ வெள்ளாளர் [2] [3]
    ஊற்று வளநாட்டு வேளாளர்
    சைவ வேளாளர்
    அசைவ வேளாளர்
    காக்கட்டு வேளாளர்
    கார்காத்தார் அல்லது கார்காத்தர் பிள்ளை
    சோழிய வேளாளர்
    வீரகுடி வேளாளர்
    நாமதாரிப் பிள்ளை
    ஓதுவார் பிள்ளை
    தேசிகர்
    ஆறுநாட்டு வேளாளர்
    நாஞ்சில்நாட்டு வேளாளர்
    சேர வேளாளர்
    சோழ வேளாளர்
    நாட்டம்படி வேளாளர்
    நன்குடி வேளாளர்
    துளுவ வேளாளர்
    பாண்டிய வேளாளர்
    கொடிக்கால் வேளாளர்
    தொண்டை மண்டல வேளாளர்
    அரும்புக்கட்டி வேளாளர்
    வெள்ளாள முதலியார்
    வீரக்கொடி வேளாளர்
    ஆரிய வேளாளர்
    கோட்டை பிள்ளைமார்

    ReplyDelete
  37. திரு. செல்லபாண்டியன் அவர்களது தமிழர் வரலாற்று ஆய்வின் பதிவு ஒரு கால பெட்டகம்.

    அண்ணாரின் ஆய்வுப்பணி தொடர
    ஆழ்மனதின் வாழ்த்துகள்.

    அன்புடன்

    எல்.தருமன்
    18. பட்டி.


    ReplyDelete
  38. Thanks for sharing the informative post! and know the well educated grooms and brides profiles in iyer grooms in Chennai and all over Tamil Nadu. Free Registration!

    ReplyDelete
  39. அப்போ பிள்ளை, முதலி,கவுண்டர், செட்டியார் இவங்க எல்லாம் போலி சமூகம் தேவேந்திர குல வே***ர் மட்டுமே ஆதியில் இருந்து வந்தது இத நாங்க நம்பனும் அது தான் உன் திட்டம்😂😂😂

    ReplyDelete
  40. Pandarthar sathi imam sitthar inam

    ReplyDelete
  41. குறவர் குறத்தியரை இப்போதுள்ள நிலையில் மட்டும் பார்க்க வேண்டாம் ஏன்? பள்ளர் இடையர் இன்றும் அன்றும் ஒரே மாதிரியாக இருக்கிறார்களா?
    குறிஞ்சி குறவர் வேறு
    1957ல்நரிககொறவர் என பெயர் சூட்டப்பட்ட மராட்டிய வாகிரிபோலி மொழிபேசும் ஊசி பாசி விற்பனை செய்யும் மக்கள் வேறு என்ற வரலாறு அறியாமையா?

    குறவர் குறிஞ்சியில் முதல் விவசாயத்தை தொடங்கியதை அறியீரா?

    தினை புறம் அறிவீர்களா?
    தினை அறுத்து பொங்கல் வைத்தது அறிவீரா? செவ்வாழையில் முற்றத்தில் விருந்தினருக்கு பங்கிட்டு அறிவுரா? மிளகு கரும்பு அவரை வாழை எல்லாம் குறவர் களே குற்றத்தில் காட்டெரிப்பு முறையில் விவசாயம் செய்ததை சங்க இலக்கியங்களில் காணலாம்.

    குறிஞ்சி குறவர் வேறு
    வந்தேறிகளான நக்கலா என்ற இயற்பெயர் பெயரை கொண்ட நரிக்கொறவர் வேறு என்ற ஆதி நாய்க்குட்டி வரலாற்றை சரியாக அறிக

    தமிழ் வாழ்க தமிழ் குடி வாழ்க

    ReplyDelete
    Replies
    1. Dr. k. K. VPY
      Vellalar patrika entha ilakiyathilum kuripida padavillai. Avarkal idaikala thamil kudiya? Or kalapirarkal thaan vellalarkala?

      Delete
  42. Best 10 Casinos in San Diego near Borgata Hotel & Casino
    Top 10 Casino in San Diego · 용인 출장마사지 M Resort · 태백 출장안마 Bally's · Golden Nugget · Casino at 목포 출장마사지 Wynn · Caesars Palace · 광양 출장마사지 Mandalay Bay Resort & Casino · 부산광역 출장마사지 Golden Nugget

    ReplyDelete
  43. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  44. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    ReplyDelete
  45. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர்

    கி.பி.1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு சேர சோழ பாண்டியன் குலத்தினர் வேணாடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இலங்கை ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற இடத்தில் சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.

    உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் கன்னியாகுமரியில் இருந்து ஆட்சி செய்து சிறிது காலம் மதுரையை ஆக்கிரமித்தனர். அவர்கள் பட்டாணி ராகுத்தனுக்கு எதிராக போர்த்துகீசியர்களுடன் கூட்டு சேர்ந்தனர். நாடார்கள் அவர்களை முன்னோர்களாகக் கருதி அவர்களுக்குக் கோயில் எழுப்பியுள்ளனர்.

    உறையூரை ஆண்ட கடைசி சோழன் வீரசேகர சோழன். விஜயநகர நாயக்கர் தனது அரசை ஆக்கிரமித்த பிறகு, கி.பி 1529 இல் வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியர்களின் பிரதேசத்தை ஆக்கிரமித்தார். சந்திரசேகர பாண்டியனுக்கு உதவ அனுப்பப்பட்டவர் நாகம நாயக்கர். நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியரிடம் மீட்டு கொடுக்கவில்லை.

    வீரசேகர சோழன் மகனும் மகளும் இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.

    விஸ்வநாத நாயக்கர் வந்து நாகம நாயக்கரைக் தோற்கடித்து கிருஷ்ணதேவ ராயரிடம் கைதியாக அழைத்துச் சென்றார். விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    வீரசேகர சோழனின் மகன் வெங்கல தேவ மகராசன் இலங்கைக்குத் தப்பிச் சென்றான். பல வருடங்கள் கழித்து போர்த்துகீசியர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வந்து கன்னியாகுமரிக்கு அருகில் வெங்கலராசன் கோட்டை என்று ஒரு கோட்டையை கட்டினார். ஆனால் ஒரு உள்ளூர் ஆட்சியாளர், துளு-ஆய் அரசராக இருக்கலாம் வெண்கல தேவனின் மகளை திருமணம் செய்ய விரும்பினார். அதை விரும்பாத வெங்கல தேவன் பின்னர் குரும்பூர் சென்றார். அங்கேயும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட அவர் தற்கொலை செய்து கொண்டார். வெங்கல தேவரின் வழித்தோன்றல்கள் வெங்கலராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன. வெங்கலராயன் கூட்டம் நாடார் குலத்தின் துணைக்குழு ஆகும்.

    .

    ReplyDelete
  46. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  47. நாகர்

    நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

    ஹிந்தி

    இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

    இந்திரன்

    இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

    நஹுஷன்

    ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

    நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

    இந்திரனின் வழித்தோன்றல்கள்

    கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

    நஹுஷன் → யயாதி
    யயாதி → புரு வம்சம்
    புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
    குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

    கவுரவ வம்சாவளியினர்

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 1100 ற்கு முன்பு நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

    நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    ReplyDelete
  48. நாகர்

    குஹன் வம்சாவளியினர்

    குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

    ராவணனுடன் போர்

    குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர - வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

    மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

    மறவர்

    மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

    இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    ReplyDelete
  49. நாகர்

    முற்குஹரின் இலங்கை படையெடுப்பு

    அயோத்தியைச் சேர்ந்த முற்குஹர் இலங்கை மீது படையெடுத்தனர்.

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    குஹன் குலத்தின் மூன்று கிளைகள்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, குஹனின் மூன்று கிளைகள் சிங்கர் வங்கர் மற்றும் கலிங்கர். நாகர்கள் கங்கையில் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளம் மற்றும் கலிங்கத்தில் ராஜ்யங்களை நிறுவினர் அல்லது இணைந்தனர்.
    இவை குகன்மூன்று பண்டைய ராஜ்யங்கள்

    1. சிங்கர்- வங்காளத்தில் சிங்கள நாடு
    2. வங்கர் - வங்காளம்
    3. கலிங்கர் - ஒரிசா

    இந்த நாடுகளில் இருந்து நாகர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மற்றும் இலங்கையில் குடியேறத் தொடங்கினர்.

    குஹன் குலத்தின் மூன்று துணைப்பிரிவுகள்

    மூன்று குஹன் கிளைகளான சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கரில் இருந்து வந்த நாகர்கள் இணைவதன் மூலம் நாகர்களின் மூன்று குலங்கள் தோன்றின.
    இவை

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முற்குஹர் (முக்குவர்)

    இந்த மூன்று குலங்களும் மட்டக்களப்பு மான்மியத்தின் படி இலங்கையில் முற்குலத்தோர் அல்லது முக்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களவர்களுடனான இந்த நெருங்கிய உறவின் காரணமாக, கண்டியின் கலிங்கன் அரசர்களால் ஆளப்பட்ட மட்டக்களப்பில், முக்குவர் பொடி எனப்படும் மட்டக்களப்பு பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் முக்குவர் ஆளுநர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    இதேபோல் மறவர் வன்னியர் என்னும் மட்டக்களப்பு பகுதியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். எனினும் வடக்குத் தமிழ்ப் பகுதியாகிய, யாழ்ப்பாணத்தில் மறவரும் முக்குவரும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. குஹன் குலங்களாகிய சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் கிமு 543 இல் விஜயபாஹுவின் படையெடுப்பின் பின்னர் குடியேறியிருக்கக்கூடிய ஆரம்பகால நாகர் குடியேற்றக்காரர்களாக இருக்கலாம்.

    இந்தியன் முக்குலத்தோர்

    இந்தியாவில் மறவர் முக்குவரில் இருந்து தங்களை தூரப்படுத்திக் கொண்டு, களப்பிரர்கள் மற்றும் தெற்கு ஆற்காடு பகுதியில் உள்ள துளுவ வெள்ளாளர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  50. நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  51. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  52. நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    ReplyDelete
  53. நாகர்

    அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

    கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

    இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

    நாக்பூர்

    நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

    ReplyDelete
  54. நாகர்

    நாகர்களின் எழுச்சி

    12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

    ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

    துளு படையெடுப்பு

    கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

    பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

    சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

    பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

    நாயர்கள்

    நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
    நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

    நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

    ReplyDelete
  55. நாகர்

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

    டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

    களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

    கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

    மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

    மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

    தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பரசுராமன்

    நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

    உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.


    நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

    நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

    1. கோலத்திரி வம்சம்
    2. சாமுத்திரி வம்சம்
    3. கொச்சி வம்சம்
    4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

    சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

    வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

    வள்ளுவ கோனாத்திரி

    வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

    தரூர் ஸ்வரூபம்

    தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

    ReplyDelete
  56. நாகர்

    சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

    கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

    வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

    வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

    கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

    வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

    சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

    கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

    கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

    ReplyDelete
  57. நாகர்

    விஜயநகர நாயக்கர் தாக்குதல் (கி.பி. 1377)

    குமார கம்பண்ணனின் கீழ் வந்த விஜயநகர தாக்குதல் மதுரை சுல்தானை தோற்கடித்து வெளியேற்றியது. விஜயநகர காலத்தில் கள்ளர்களில் பலர் இந்து மதத்திற்கு திரும்பினர். ஆனால் பல கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்துக்கொண்டனர்.

    1. விருத்தசேதனம்
    பிறமலைக்கள்ளர் சிறுவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருந்து மற்றும் கொண்டாட்டத்துடன் விருத்தசேதனம் செய்து வந்தனர்
    2. கள்ளர் திருமணங்களில் மணமகன் தாலி கட்ட மாட்டார் ஆனால் அவரது சகோதரிதான் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
    3. கள்ளர் தாலி பிறை மற்றும் நட்சத்திரக் குறியைக் கொண்டுள்ளது.

    வாணாதிராயர்

    விஜயநகர நாயக்கர்கள் மதுரையின் ஆட்சியாளர்களாக ஆந்திரபிரதேசத்தில் பாண சாம்ராஜ்யத்தின் பாணர்களை நியமித்தனர். மகாபலி வாணாதிராயர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர். தொல் மகாவிலி வாணாதிராயர் என்று அழைக்கப்படும் ஒரு பாண தலைவர் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர தளபதி விட்டலாவால் பாண்டிய சிம்மாசனத்தில் வைக்கப்பட்டார். ஒரு வாணாதிராயர் தன்னை பாண்டியகுலாந்தகன் அல்லது பாண்டியன் வம்சத்தை அழிப்பவர் என்று அழைத்து கொண்டார். வாணதிராயர்கள் (வன்னியர், வாணவராயர், வாணகோவரையர்) தமிழ்நாட்டின் நாகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். வாணாதிராயர்கள் இனரீதியாக தெலுங்கு பலிஜா நாயக்கர்களுடன் தொடர்புடையவர்கள் ஆனால் எந்த நாக குலத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. பின்னர் பல்வேறு நாக குலங்களின் தலைவர்களாக இருந்த இந்த வாணாதிராயர்கள் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரர்கள் ஆனார்கள். இந்த வாணாதிராயர்கள் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தினர். நாகர், களப்பிரர் மற்றும் துளுவ வெள்ளாளர்களும் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

    விஜய நகர நாயக்கர்கள் வாணாதிராயர்களை நாக குலத் தலைவர்களாக திறம்பட உருவாக்கி, தமிழ்நாட்டின் நாக குலங்களைக் கட்டுப்படுத்தினர் மற்றும் நாகப் படைகளைப் பயன்படுத்தி வில்லவர் வம்சங்களை எதிர்த்தனர்.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள்

    தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையாளர்கள் வில்லவர்கள் ஆவர் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேஷின் சரியான உரிமையாளர்கள் பாணர்கள் ஆகும். வில்லவர் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தை ஆண்டு வந்தனர். பாணர் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் மற்றும் வில்லவர்களின் பரம எதிரிகள் ஆவர்.

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய ராஜ்யத்தை தோற்கடித்தார், இது கேரளாவில் (1335) துளு பாண-நேபாள ஆட்சிக்கு வழிவகுத்தது, மேலும் தமிழ்நாட்டில் பலிஜா (பாண) நாயக்கர் ஆட்சிக்கு வழிவகுத்தது (1377). இது கேரளாவில் நேபாள நாகர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட்டில் கங்கை நதி நாகர்களின் உயர்வுக்கும் வழிவகுத்தது.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானியர்களின் உத்தியாகிய உள்நாட்டு திராவிட வில்லவர்களை ஒடுக்குதல் மற்றும் நாகர்களை உயர்த்துவதற்கான உத்தியை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியர்கள் வட இந்திய ஆரிய நாகர் மற்றும் கேரளாவில் உள்ள வெளிநாட்டு இரத்தம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவளித்தனர். டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தில்லி சுல்தானகத்தின் அதே உத்தியைப் பின்பற்றினர்.

    பெரும்பாலான காலனித்துவ நிர்வாகிகள் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். 450 ஆண்டுகள் நீண்ட ஐரோப்பிய காலனித்துவ காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நாகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. நாகர்கள் தென்னிந்தியாவிற்கு அடிமைகளாக அல்லது அகதிகளாக வந்திருந்தனர். நாகர்கள் தென்னிந்தியாவில் தொழிலில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் அல்லது அடிமை வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் 1335 ற்கு பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உதவியுடன் நாகர்கள் உண்மையில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தனர்.

    கேரளாவின் துளு-நேபாள ஆட்சியாளர்களை போர்த்துகீசியர்கள் ஆதரித்தனர். தில்லி சுல்தானியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு பதிலாக ஐரோப்பியர்கள் கேரளாவின் நாகர்களின் பாதுகாவலர்களாக மாறினர். கேரளாவில் உள்ள நாகர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். நாகர்கள் ஐரோப்பிய உதவியுடன் சுதந்திரம் அடையும் வரை தங்கள் உயர் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

    அரேபியர்கள், டெல்லியின் துருக்கிய சுல்தான்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு மாலுமி வணிகர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் கேரளாவின் பூர்வீக வில்லவர் தமிழ் ஆட்சியாளர்களை விட பூர்வீகமற்ற துளு-நேபாள நாக-சாமந்தா குலங்களை விரும்பினர்.

    தமிழ்நாட்டில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் பல நாகர்களை குறிப்பாக மறவர் மற்றும் வேளாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார்கள். ஆற்காடு நவாப்பின் கூட்டாளிகளாக வந்த ஆங்கிலேயர்கள் நாகர்களை உயர்த்துவது மற்றும் வில்லவர்களை ஒடுக்குவது போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

    ReplyDelete
  58. நாகர்

    சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் நாகரின் கூட்டு

    யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

    மருதநாயகம் பிள்ளை (கி.பி 1725 முதல் 1764 வரை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் இராணுவத்தின் வெள்ளாள தளபதி ஆவார். அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு யூசுப் கான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், இதனால் அவர் சந்தா சாஹிப் என்ற ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாமின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

    யூசுப் கான் ஒரு போர்த்துகீசிய கிறிஸ்துவர் ஆகிய மார்சியா அல்லது மார்ஷா என்ற லூசோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தை கிறிஸ்தவர் என்று பிரிட்டிஷாரை நம்ப வைத்தார். பிரிட்டிஷார் அவரை மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வரி வசூலிப்பவராக நியமித்தனர்.

    ஆனால் மருதநாயகம் பிள்ளை தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு துரோகம் செய்ய முயன்றபோது அவரை தூக்கிலிட்டனர். பிரிட்டிஷார் அவரது மகனை கிறிஸ்தவராக வளர்த்தனர்.

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் எனப்படும் ஷேக் முஹம்மது ஆயாஸ் கான்

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் (1713 முதல் 1799) இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹைதர் அலியின் தளபதி ஆவார். ஆயாஸ் கான் ஒரு ஹைதர் அலியின் தத்தெடுத்த மகன் போல மற்றும் நம்பகமான சேவகரும் ஆனார். சித்ரதுர்காவின் ஆளுநராக ஆயாஸ் கான் நியமிக்கப்பட்டார்.

    1778 இல் ஆயாஸ் கான் பெட்னூர் கோட்டையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1782 ல் ஆயாஸ் கான் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து பெட்னூர் கோட்டையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். சரணடைந்த பிறகு அவர் பம்பாயில் பிரிட்டிஷ் ஓய்வூதியதாரராக வாழ்ந்தார்.

    திராவிட மலையாளமாகிய மலையாண்மையின் முடிவு

    நாயர்களின் சிறந்த நண்பர்களில் பிரிட்டிஷாரும் இருந்தனர். பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பேசும் கிரந்த-மலையாளத்தைப் படித்தனர், அவை நேபாள சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் கி.பி 1815 முதல் கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்புடன் நேபாள கலப்பு மலையாளத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். அதனுடன் மலையாளத்தின் திராவிட வடிவமாகிய மலையாண்மை மொழி மற்றும் அதில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கட்டிடக்கலை, கப்பல் கட்டும் கலை, தாவரவியல், மருத்துவம், செய் வினை போன்ற பல்வேறு பாடங்களில் உண்டாயிருந்த திராவிட மொழியாய மலையாண்ம புத்தகங்கள் எதுவும் பிரிட்டிஷ்காரர்களால் மொழிபெயர்க்கப்படவில்லை. நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து
    மந்தார ராமாயணம், பாகவதோ போன்ற துளு புத்தகங்களை மலையாளத்தில் தழுவி மீண்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆரம்பகால மலையாள புத்தகங்களாகப் போற்றப்பட்டன.

    பல பாலக்காடு நாயர்கள் பிரிட்டிஷாரின் கீழ் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் மாலை நேரங்களில் சுதந்திரப் போராளிகளாக இரட்டிப்பாகினர். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு சுதந்திர இயக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.

    பிரிட்டிஷார் மெட்ராஸின் கிறிஸ்தவக் கல்லூரிகளை தங்கள் நண்பர்களுக்கு கல்வி கற்பதற்காகப் பயன்படுத்தினார்களே தவிர உண்மையான கிறிஸ்தவர்களுக்காக அல்ல.

    சேர சோழ பாண்டியன் ராஜ்யங்களின் உரிமையாளர்களாக வில்லவர் மக்களை பிரிட்டிஷார் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. பிரிட்டிஷ் அறிஞர்களும் மிஷனரிகளும் வில்லவர் மக்களை கேலி செய்தனர். நேர்மையற்ற ஆங்கிலேயர்கள் நாகர்களின் தலைவர்களாக இருந்த வாணாதிராயர்களையும் நாயக்கர்களையும் பொலிகர்களையும் பாதுகாத்தனர்.

    எனினும் பிரிட்டிஷார் தமிழ்நாட்டின் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரை கிபி 1911 இல் குற்றப் பரம்பரையினராக அறிவித்தனர்.

    ReplyDelete
  59. நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.


    நாக மேம்பாட்டு கட்சிகள்

    திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

    ______________________________________________

    ReplyDelete